twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாலி எழுதிய கந்தபுராணம்- வெளியிட்டார் இளையராஜா

    By Sudha
    |

    Vaali's Kandha Puranam Book Release
    கவிஞர் வாலி எழுதிய தமிழ்க் கடவுள் கந்தபுராணம் என்ற புத்தகத்தை இசைஞானி இளையராஜா சனிக்கிழமை வெளியிட்டார்.

    ஒரு நூலாசிரியரின் கையெழுத்திலேயே வெளிவரும் முதல் முழு நூல் என்ற சிறப்புடன் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது.

    மைலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை இசைஞானி இளையராஜா வெளியிட, முதல் பிரதியை தயாரிப்பாளர் ஏ வி எம் சரவணன் மற்றும் இயக்குநர் கே பாலசந்தர் பெற்றுக்கொண்டனர்.

    விழாவுக்கு நீதியரசர் எம்.சொக்கலிங்கம் தலைமை ஏற்றுப் பேசினார்.

    இரா.செல்வக்கணபதி நூல் அறிமுகம் செய்தார். நாகை முகுந்தன், நடிகர் பார்த்திபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X