Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மீண்டும் வேகம் பிடித்த பொன்னர் சங்கர்!
இடையில் இந்தப் படத்தின் தயாரிப்பை இளைஞன் படத்தை எடுத்த மார்ட்டின் ஏற்றதாகவும், தியாகராஜனுக்கும் அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதித்துள்ளதாகவும் செய்துகள் வெளியாகின.
இப்போது தயாரிப்புப் பொறுப்பு மீண்டும் தியாகராஜனிடமே வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள பத்திரிகைக் குறிப்பில், பொன்னர் சங்கர் படத்தை தியாகராஜன் பிரமாண்டமாக தயாரித்து இயக்குவாதகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
படத்தின் பெரும்பான்மையான பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டனவாம். தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், என நாட்டின் பல பகுதியிலிருந்தும் கிராமியக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இந்தப் படத்தின் பாடல் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளார்களாம்.
கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ள இந்தப் படத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா சோப்ரா, திவ்யா பரமேஷ்வர் என இரு உலக அழகிகள் நடிக்கிறார்கள். பிரசாந்த் தங்கையாக சினேகாவும், தலையூர் காளியண்ணன் என்ற முக்கிய வேடத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் நடிக்கிறார்.
மேலும் ராஜ்கிரண், வடிவேலு, ஜெயராம், குஷ்பூ, நாசர், விஜயகுமார் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உண்டு.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு போர்க்களக் காட்சிக்காக 5000 துணை நடிகர்கள் பங்கேற்றனர்.
தமிழில் இதுவரை வந்த சரித்திரப் படங்களில் மிகப் பிரமாண்ட படம் என்ற அந்தஸ்தை பொன்னர் சங்கர் பெறும் என்கிறார் தியாகராஜன்.