Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நயன்தாராவுடன் உலகம் சுற்றும் பிரபுதேவா!
திருமணம் செய்து கொள்ளாமலே கணவன்-மனைவி போல் இந்த இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். பத்திரிகையாளர்கள், தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்துவிட்டால் ஓடி ஒளிகிறார்கள். மீடியாக்கார்கள் கேட்டாலும் இந்த விவகாரத்தை மூடி மறைத்து மழுப்புகிறார்கள்.
நயன்தாரா திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாராவுடன், பிரபுதேவா தொடர்பு வைத்திருப்பது பிரபுதேவா குடும்பத்தில் புயலை கிளப்பியது. அவருடைய மனைவி ரமலத், "நயன்தாராவை எங்கே பார்த்தாலும் அடிப்பேன்" என்று எச்சரித்தார்.
அதை தொடர்ந்து பிரபுதேவா மனைவி ரமலத்தை சமாதானம் செய்து பார்த்தார். நயன்தாராவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வதற்கு ரமலத்திடம், பிரபுதேவா சம்மதம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ரமலத் சம்மதிக்கவில்லையாம். எனவே சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்து நயன்தாராவை இரண்டாம் திருமணம் செய்து கொள்வதில் தீவிரமாக உள்ளாராம் பிரபு தேவா.
இந் நிலையில் நயன்தாராவும், பிரபுதேவாவும் ரகசியமாக துபாய் போய் இருக்கிறார்கள். துபாயில், நயன்தாராவின் அண்ணன் வசிக்கிறார். அவருடைய வீட்டில் இருவரும் 3 தினங்கள் தங்கினராம்.
பின்னர் அங்கிருந்து இருவரும் ஜோடியாக பிரான்சு பயணமாகியுள்ளனர். கல்பாத்தி அகோரம் தயாரிக்க, ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தை பிரபுதேவா இயக்குகிறார். அந்த படப்பிடிப்புக்கான இடங்களை பிரபுதேவா, பிரான்சில் தேர்வு செய்கிறார்.
அதன்பிறகு நயன்தாராவும், பிரபுதேவாவும் சுவிட்ஸர்லாந்து, நார்வே, ஸ்வீடன் போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார்களாம். இன்னும் 10 நாட்களுக்கு ஐரோப்பாவில்தான் இந்த இருவரும் முகாமிட்டிருப்பார்களாம்.
ஒருவேளை ரகசியக் கல்யாணமும் முடிந்து தேனிலவுக்கு புறப்பட்டுவிட்டார்களோ!