Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முழு நேர நடிகராக மாறிய தயாரிப்பாளர்!
பின்னர் பசங்க படம் வந்தது. யார் இந்த வாத்தியார்? என்று கேட்கும் அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜெயப்பிரகாஷ். அதன்பிறகு பசங்க, நாடோடிகள், தில்லாலங்கடி, வம்சம், நான் மகான் அல்ல என நடித்த அத்தனை படங்களிலும் தனி முத்திரை பதித்தார்.
நடிகரான அனுபவம் பற்றி ஜெயப்பிரகாஷ் இப்படிச் சொல்கிறார்:
"தயாரிப்பாளர்கள் பலர் இப்போது நடிக்க துவங்கி உள்ளனர். பொற்காலம், நெறஞ்ச மனசு, தவசி, செல்லமே, ஜூலி கணபதி என பலபடங்கள் தயாரித்தேன். அப்போது நடிக்க யோசிக்கவில்லை. மாயக்கண்ணாடி படத்தில் சேரன் பிடிவாதமாக நடிக்க வைத்து விட்டார்.
லாடம், பசங்க, நாடோடிகள், தில்லாலங்கடி, வம்சம், நான் மகான் அல்ல படங்களில் நான் நடித்த கேரக்டர்கள் என்னை முழு நேர நடிகனாக்கி விட்டது.
குணசித்திரம், வில்லன் என வெவ்வேறு கேரக்டர்களில் நடிக்கிறேன். ஒரே மாதிரி நடித்தால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். எனவே படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.
இயக்குனர் என்ன நினைக்கிறாரோ அதன்படி நடிக்கிறேன், இயக்குனரின் நடிகராக இருக்கவே விரும்புகிறேன்.
தயாரிப்பாளராக இருந்து பலருக்கு வேலை கொடுத்த நான் இப்போது நடிகனாகி விட்டேன். நடிகனாக பலரை ரசிக்க வைப்பது மகிழ்ச்சியான விஷயம்" என்றார்.