Don't Miss!
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
முழு நேர நடிகராக மாறிய தயாரிப்பாளர்!
பின்னர் பசங்க படம் வந்தது. யார் இந்த வாத்தியார்? என்று கேட்கும் அளவுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜெயப்பிரகாஷ். அதன்பிறகு பசங்க, நாடோடிகள், தில்லாலங்கடி, வம்சம், நான் மகான் அல்ல என நடித்த அத்தனை படங்களிலும் தனி முத்திரை பதித்தார்.
நடிகரான அனுபவம் பற்றி ஜெயப்பிரகாஷ் இப்படிச் சொல்கிறார்:
"தயாரிப்பாளர்கள் பலர் இப்போது நடிக்க துவங்கி உள்ளனர். பொற்காலம், நெறஞ்ச மனசு, தவசி, செல்லமே, ஜூலி கணபதி என பலபடங்கள் தயாரித்தேன். அப்போது நடிக்க யோசிக்கவில்லை. மாயக்கண்ணாடி படத்தில் சேரன் பிடிவாதமாக நடிக்க வைத்து விட்டார்.
லாடம், பசங்க, நாடோடிகள், தில்லாலங்கடி, வம்சம், நான் மகான் அல்ல படங்களில் நான் நடித்த கேரக்டர்கள் என்னை முழு நேர நடிகனாக்கி விட்டது.
குணசித்திரம், வில்லன் என வெவ்வேறு கேரக்டர்களில் நடிக்கிறேன். ஒரே மாதிரி நடித்தால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும். எனவே படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.
இயக்குனர் என்ன நினைக்கிறாரோ அதன்படி நடிக்கிறேன், இயக்குனரின் நடிகராக இருக்கவே விரும்புகிறேன்.
தயாரிப்பாளராக இருந்து பலருக்கு வேலை கொடுத்த நான் இப்போது நடிகனாகி விட்டேன். நடிகனாக பலரை ரசிக்க வைப்பது மகிழ்ச்சியான விஷயம்" என்றார்.