Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ஷகீலாவுக்கு சம்மன்!
கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பாளையங்கோட்டையில், உள்ள ஒரு தியேட்டரில் ஷகீலா நடித்த இளமைக் கொண்டாட்டம் என்ற படம்திரையிடப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் ஷகீலாவின் ஆபாசக் காட்சிகள் இணைக்கப்பட்டு ஓடுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் மாறுவேடத்தில் சென்று படத்தைக் கண்காணித்தனர்.
அப்போது ஷகீலாவின் ஆபாச பிட் காட்சிகள் ஓட்டப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் ஆபாசப் படச் சுருளைக் கைப்பற்றினர். இதையடுத்து ஷகீலா, அவருடன் நடித்திருந்த நடிகர் திணேஷ், தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர் பரமசிவம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதில் பாஸ்கர் தலைமறைவாகி விட்டார். மற்றவர்கள் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் ஷகீலா மட்டும் இதுவரை ஆஜராகவில்லை.
இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 26ம் தேதியன்று ஷகீலா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் ஜெசிந்தா மார்ட்டின் உத்தரவிட்டார். அதேசமயம், பாஸ்கரனைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.