'வில்லு': கமிஷனரிடம் அருண்பாண்டியன் புகார்

ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் லண்டன் கருணாஸ் தயாரித்துள்ள படம் வில்லு. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ளனர்.
அடுத்தமாதம் பொங்கலுக்கு இப்படம் ரிலீசாக இருக்கிறது. இதற்கிடையில் இப் படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகள் இணைய தளத்தில் நேற்று வெளியானது. இப்போது இரண்டு பாடல் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இணைய தளத்தில் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் புகார் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











