Don't Miss!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
நான் கடவுள்: 16 கோடிக்கு வாங்கிய ஜீ!
முதல் கட்டமாக, இயக்குனர் பாலாவின் இரண்டாண்டு கால தயாரிப்பான நான் கடவுள் படத்தை வாங்கியுள்ளது ஜீ.
ஜீ டிவி விரைவில் தனது தமிழ் ஒளிபரப்பைத் துவங்கவுள்ளது. தமிழில் சேனல் துவங்க வேண்டுமானால் அதற்கு இன்றியமையாத ஒன்று தமிழ் சினிமா ஒளிபரப்பு உரிமை பெறுவது.
பெரும்பாலும் புதிய தமிழ்ப் படங்களின் உரிமையை சன் மற்றும் கலைஞர் டிவி மட்டுமே வைத்துள்ளன. வெகு சில படங்களை ஜெயா டிவி வாங்குகிறது.
இந் நிலையில் இந்த மூன்று டிவிக்களுக்கும் போட்டியாக ஜீயும் களத்தில் குதித்துள்ளது. ஆரம்பத்தில் சின்னச்சின்ன திரைப்படங்களை வாங்கிய ஜீ, இப்போது பாலாவின் எதிர்பார்ப்புக்குரிய நான் கடவுள் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் வாங்கியுள்ளது.
இந்தப் படம் முதலில் பிஎல் தேனப்பன் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்டது. பட்ஜெட் தொகை எகிறியதால் தயாரிப்பிலிருந்து தேனப்பன் விலகிக்கொள்ள பிரமிட் சாய்மிரா நிறுவனம் அதை ஏழரை கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொண்டது.
ஆனால் அவர்களுக்கும் பிரச்சினை தொடர்ந்தது. முதல் பிரதி அடிப்படையில் பாலாவே படத்தை எடுத்து வந்ததால், படம் முடியும்போது தயாரிப்புச் செலவு இரு மடங்காகிவிட்டது.
'கைக்காசை செலழித்துப் படமெடுத்திருக்கிறேன். எனவே 14 கோடி கொடுக்க வேண்டும்' என இயக்குநர் பாலா கறாராகக் கூறிவிட்டார். பிரமிட் சாய்மிரா அவ்வளவு பெரிய தொகை கொடுக்கத் தயங்கியது. பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போனது.
இந்நிலையில்தான் ஜீ நிறுவனம் இந்தப் படத்தை 16 கோடிக்கு மொத்தமாக வாங்கிக் கொண்டுள்ளது. தீபாவளிக்குப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.
மேலும், இதே நிறுவனத்துக்காக பாலா ஒரு புதிய படத்தை உருவாக்கித் தர ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூபறப்படுகிறது.
பாலா தவிர மேலும் 3 இயக்குநர்களிடமும் புதிய படத் தயாரிப்புக்கு பேசி வருகிறது ஜீ நிறுவனம்.