'அப்பாவி' சுகானி!

இப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் கூர்க் மலைப்பகுதிகளில் நடைபெற்றது.
நா. முத்துக்குமார் எழுதி, ஹரிஹரன் ஸ்ரேயா கோஷல் பாடிய 'ரயிலின் பாதையில் பூக்கின்ற பூ நான' என்ற பாடல் இங்கு படமாக்கப்பட்டது.
கவுதம் நாயகனாகவும், சுகானி நாயகியாகவும் நடிக்கிறார்கள். இருவருமே அறிமுகங்கள்தான்.
ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு இ. கிருஷ்ணசாமி, எடிட்டிங் வி டி விஜயன், நடனம் தினேஷ், சண்டைபயிற்சி ஆகஷன் கிங் பழனி ராஜ், பாடல்கள் வைரமுத்து, நா முத்துக்குமார்.
மக்கள் தொடர்பாளராக நிகில் பணியாற்றுகிறார்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஆர் ரகுராஜ்.
இசிஆர் - விஎல் தண்டபாணி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் வரும் டிசம்பரில் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











