Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'ஆபாச காட்சி, அறுவறுப்பான வசனங்கள்...': 52 வெட்டுக்களுடன் ஆரண்ய காண்டத்துக்கு அனுமதி!
சென்ன 28 தவிர, உருப்படியாக ஒரு படமும் தராத எஸ்பிபி சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜாகிஷெராஃப் நடித்துள்ளார். குமாரசாமி தியாகராஜா இயக்கியுள்ளார்.
இந்தப் படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் படம் பார்க்கத் தகுந்ததாக இல்லை என்று தணிக்கைக் குழு கருதியதால் அனுமதி தர மறுத்துவிட்டது.
யதார்த்தம் என்ற பெயரில் வக்கிரமான ஆபாச காட்சிகள், அறுவறுப்பான வசனங்கள் கொண்ட இந்தப் படத்துக்கு அனுமதி தரமுடியாது என தணிக்கைக் குழு பகிரங்கமாகவே கூறிவிட்டது.
மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடந்த இந்தப் படத்தை தூசு தட்டி மேல்முறையீட்டுக்குக் கொண்டு சென்றனர். அவர்களும் இந்தப் படத்தை மிகவும் மோசம் என்று கூறியதோடு, 52 இடங்களில் கத்தரி போட்டு, அரைப் படத்தை ஏ சான்றிதழுடன் கொடுத்துள்ளனர்.
இவ்வளவு மோசம் என கருதப்படும் ஒரு படத்தை வெளியிட்டே தீர வேண்டிய கட்டாயம் என்ன? என்ற கேள்வியோடுதான் இந்த சான்றிதழையே அவர்கள் அளித்துள்ளனர்.
'இந்தியில் இதைவிட மோசமாக படங்கள் வந்தாலும் அனுமதிக்கிறார்கள். இங்குமட்டும் அனுமதிக்க மறுக்கிறார்களே", என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான சரண்.
ஆக மோசமான படம் என்று தெரிந்தேதான் இந்த தவறைச் செய்திருக்கிறார்கள்!!