twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கே.பி. மீண்டும் வருகிறார் - டிவிக்கு

    By Staff
    |

    K Balachander
    நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கே.பாலச்சந்தர் டிவி சீரியல் பக்கம் திரும்பியுள்ளார். அவரது திரைப்பட ஹிட்டான சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பெயரில் புதிய மெகா தொடரை கையில் எடுத்துள்ளார் பாலச்சந்தர்.

    இது தந்தை- மகள் பாசத்தை விளக்கும் தொடராகும்.

    ரவி ராகவேந்தர் தந்தையாகவும், சஹானா தொடர் புகழ் காவ்யா மகளாகவும் நடிக்கவுள்ளார். சஹானா தொடரையும் பாலச்சந்தரே இயக்கினார். அது தாய் - மகள் பாசக் கதை என்பது நினைவிருக்கலாம்.

    பாம்பே சாணக்யா இந்தத் தொடரை இயக்குகிறார். தவமணி வசீகரன் வசனம் எழுதியுள்ளார். கணேஷ் இசையமைக்கிறார்.

    பாத்திமா பாபு, யுவராணி, தேவதர்ஷினி, சுரேஷ்வர், ராஜ்மதன், ரவிகாந்த், விழுதுகள் சந்தானம் ஆகியோரும் தொடரில் இடம் பெறுகின்றனர்.

    புஷ்பா கந்தசுவாமி தயாரிக்க திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இதை ஜீ தமிழ் டிவியில் காணலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X