Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பாத்டப்பில் 17 மணிநேரம் இருந்த ரஜினி!
எந்திரன் பட ஷூட்டிங்கின்போது, ஒரு முக்கிய காட்சிக்காக பாத் டப்புக்குள் 17 மணி நேரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்துள்ளார்.
பொதுவாக மேக்கப், அதிக சிரத்தை எடுத்து பொறுமையுடன் நடிப்பது போன்றவற்றுக்கு கமல்ஹாஸனைத்தான் உதாரணமாகச் சொல்வார்கள். ஆனால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறார் ரஜினி, எந்திரன் படம் மூலம்.
இந்தப் படத்துக்காக அவர் மிக ரிஸ்கான ஸ்டன்ட் காட்சிகளில் கூட டூப் இல்லாமல் நடித்ததாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களை அருகில் வைத்துக் கொண்டு, அவர்கள் செய்து காட்டிய அத்தனை சண்டைக் காட்சிகளிலும் ஒரிஜினலாக ரஜினியே நடித்துள்ளதாக ஷங்கர் கூறியுள்ளார்.
மேலும், ரோபோவை உருவாக்கும் ஒரு காட்சியில், ரஜினி ஒரு பாத் டப்புக்குள் அமர்ந்தபடி, தலையை மட்டும் ஒரு பலகைக்கு வெளியே நீட்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம். இந்தக் காட்சியை எடுத்து முடிக்க 17 மணி நேரமானதாம். அவ்வளவு நேரமும் சலித்துக் கொள்ளாமல் பொறுமையாக இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தாராம் ரஜினி.
"அதுதான் ரஜினி சாரின் தனித் தன்மை. அவரைப் போல உறுதியும், அர்ப்பணிப்பும் கொண்ட கலைஞனை நான் பார்த்ததில்லை..." என்று ஷங்கர் கூறியுள்ளார்.