twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கன்னடத்திற்குப் போனார் அபிநயா

    By Sudha
    |

    Sasikumar and Abhinaya
    நாடோடிகள் படம் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் ரசிகர்களைப் பெற்ற ஆந்திரத்து அபிநயா தற்போது கன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

    பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேளாதவராக இருந்தாலும், அந்தக் குறை சற்றும் தெரியாமல், மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூடியவர் அபிநயா. நாடோடிகள் படத்தில் அவரது நடிப்பும் வெகுவாகப் பேசப்பட்டது.

    நாடோடிகள் மூலம் நடிகையான அபிநயா தற்போது தமிழிலும், தெலுங்கிலும் சில படங்களில் புக் ஆகியுள்ளார். இந்த நிலையில் தற்போது கன்னடத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.

    நாடோடிகள் படத்தின் கன்னடப் பதிப்பில், தமிழில் நடித்த அதே வேடத்தில் நடிக்கிறார் அபி.

    கன்னட இளம் சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் இப்படத்தில், சசிகுமாரின் ரோலில் நடிக்கிறார். அவரது தங்கையாக வருகிறார் அபிநயா. தெலுங்கு நாடோடிகளிலும் அபிநயா அதே வேடத்தில்தான் நடித்திருந்தார். அதில் அவரது அண்ணனாக வந்தவர் ரவி தேஜா.

    மூன்று மொழிகளிலும் ஒரே கேரக்டரில் நடித்த பெருமை இதன் மூலம் அபிநயாவுக்கு வந்து சேர்ந்துள்ளது.

    அபிநயா நல்ல டான்சரும் கூட. அவருக்கு குரு என்றுயாருமே கிடையாதாம், அவராகவே நடனத்தை கற்றுத் தேர்ந்துள்ளார். இது போக 3 வயது முதலே மாடலிங்கிலும் கலக்கி வருபவர் அபிநயா என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X