Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷெர்லின் சோப்ரா நூதனப் போராட்டம்!
சர்க்கஸ்களில் மிருகங்களை சித்திரவதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஷெர்லின் சோப்ரா, தன்னை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு நூதனப் போராட்டத்தை நடத்தினார்.
சவுக்குகளும் சங்கிலிகளும் படுக்கை அறைக்கு உரித்தானவை, சர்க்கஸ் கூடாரங்களில் அல்ல என்ற தலைப்பி்ல், ஷெர்லின் தன்னைத் தானே சங்கிலியில் பிணைத்துக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் கொல்கத்தா நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறுகையில், நான் சங்கிலியால் என்னைப் பிணைத்துக் கொண்டால் அது செய்தியாகி விடுகிறது. அதேசமயம், சர்க்கஸ் கூடாரங்களில் விலங்குகளை சங்கிலியால் பிணைத்து வைத்திருந்தால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.
ஒரு விலங்கை சங்கிலியால் கட்டி வைத்திருப்பதை வேடிக்கை பார்க்கும் மனோபாவம் கொடூர மனம் கொண்டவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.
சர்க்கஸ் நடத்துபவர்கள் விலங்குகளை முரட்டுத்தனமாக அடிக்கிறார்கள், அந்த விலங்குகளை கொடூரமான முறையில் சங்கிலிகளால் கட்டிப்ப போடுகிறார்கள். சொன்னதை சரிவர செய்யாவிட்டால் அந்த விலங்குகளை சித்திரவதை செய்கிறார்கள். சாப்பாடு சரியாக தருவதில்லை என்றார் சோப்ரா.