திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!

பாசமுள்ள பாண்டியரே, பொன்னு விளையுற பூமி, வீரத்தாலாட்டு படங்களுக்குப் பிறகு சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த ராஜ்கிரணை, வெயிட்டான ரோலில் மீண்டும் காட்டியவர் பாலா. படம் நந்தா. அந்தப் படத்துக்கே தனி மரியாதையைத் தந்த பாத்திரம் அது.
தவமாய் தவமிருந்து படத்தில் இளசு, பெரிசு என்று வித்தியாசமில்லாமல் உலுக்கியெடுத்தது ராஜ்கிரண் நடிப்பு. அதன்பிறகு மரியாதைக்குரிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், இப்போது மீண்டும் தனது பரிவாரங்களுடன் இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.
ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடிக்கிறார் ராஜ்கிரண். படத்தின் பெயர் திருமங்கலத்து யானை.
ராஜ்கிரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகும் படம் இது. ராஜகிரண் தயாரித்த, இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் ராஜாதான் இசையமைப்பாளர்.
"இந்தப் படத்தில் மண்ணின் பெருமையும் இன்றைய இளைஞர்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சங்களும் தேவையான அளவுக்கு இருக்கும்" என்கிறார் ராஜ்கிரண்.
ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்குகிறது.


Click it and Unblock the Notifications











