Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
திருமங்கலத்து யானை... பரிவாரங்களுடன் வரும் ராஜ்கிரண்!
பாசமுள்ள பாண்டியரே, பொன்னு விளையுற பூமி, வீரத்தாலாட்டு படங்களுக்குப் பிறகு சினிமாவை விட்டே ஒதுங்கியிருந்த ராஜ்கிரணை, வெயிட்டான ரோலில் மீண்டும் காட்டியவர் பாலா. படம் நந்தா. அந்தப் படத்துக்கே தனி மரியாதையைத் தந்த பாத்திரம் அது.
தவமாய் தவமிருந்து படத்தில் இளசு, பெரிசு என்று வித்தியாசமில்லாமல் உலுக்கியெடுத்தது ராஜ்கிரண் நடிப்பு. அதன்பிறகு மரியாதைக்குரிய வேடங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், இப்போது மீண்டும் தனது பரிவாரங்களுடன் இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.
ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடிக்கிறார் ராஜ்கிரண். படத்தின் பெயர் திருமங்கலத்து யானை.
ராஜ்கிரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இசையில் உருவாகும் படம் இது. ராஜகிரண் தயாரித்த, இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் ராஜாதான் இசையமைப்பாளர்.
"இந்தப் படத்தில் மண்ணின் பெருமையும் இன்றைய இளைஞர்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சங்களும் தேவையான அளவுக்கு இருக்கும்" என்கிறார் ராஜ்கிரண்.
ஆகஸ்டில் படப்பிடிப்பு துவங்குகிறது.