twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்யராஜின் 'விளக்கு வச்ச நேரத்திலே...'

    By Staff
    |

    Bagyaraj
    சின்னத் திரையில் ஒரு மெகா சீரியலுக்கு கதை வசனம் எழுதுகிறார் கே பாக்யராஜ்.

    'அடடா வட போச்சே என அனைவரும் உச்சுக் கொட்டும்' அளவுக்கு அட்டகாசமான டைட்டில் வைத்துள்ளார் இந்த சீரியலுக்கு. 'விளக்கு வச்ச நேரத்துல...' - இதுதான் தலைப்பு.

    முந்தானை முடிச்சு படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலின் முதல் வரி இந்த தலைப்பு.

    கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலின் துவக்க விழா தியாகராஜா நகரில் பாலாஜி அவென்யுவில் நடைபெற்றது.

    இதில் இயக்குநர் அமிர்தம், தேவா, இராம நாராயணன், பாக்யராஜ், எம்.சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஈ.ராம்தாஸ் தயாரிக்க, பாக்யராஜ் கதை, வசனம் எழுத சி.ரங்க நாதன் டைரக்ட் செய்கிறார். இதன் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வறுகிறது. இதை எவர்ஸ்மைல் நிறுவணம் தயாரிக்கிறது.

    ஏற்கனவே பாக்யராஜின் குரு பாரதிராஜா தெக்கித்தி பொண்ணு சீரியல் மூலம் ரசிகர்களை கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சிஷ்யரும் விளக்கு வச்ச நேரத்திலே மூலம் ரசிகர்களை வசீகரிக்க வருகிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X