காங்கிரஸில் சுதாகர்-பானுச்சந்தர்!

தமிழகத்தைப் போலவே ஆந்திர அரசியலும் சினிமாவைச் சார்ந்தே இயங்குகிறது. தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் அரங்கேறும் கூத்துகளுக்கு சற்றும் சளைக்காத பல வேடிக்கைகளை தெலுங்கு அரசியல் - சினிமா நடிகர்களும் நடத்திக் காட்டி மக்களை 'மகிழ்விப்பது' வழக்கம்.
தமிழில் கிழக்கே போகும் ரெயில், நிறம் மாறாத பூக்கள், சுவர் இல்லா சித்திரங்கள், எங்க ஊர் ராசாத்தி என பல வெற்றிப்படங்களில் நாயகனாக நடித்து, பின்னர் தெலுங்குப் படங்களில் காமெடியனாக செட்டிலானவர் நடிகர் சுதாகர்.
இதே போல 'நீங்கள் கேட்டவை' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து, இப்போது காமெடியனாக மாறியவர் பானு சந்தர். இருவருமே நடிக்க ஆரம்பித்த தொடக்க காலத்தில், சென்னையில் வசி்த்தவர்கள்.
நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இப்போது தேர்தல் திருவிழா என்பதால், அரசியல் ஜோதியில் இந்த இரு நடிகர்களும் ஐக்கியமாகியுள்ளனர்.
ஹைதராபாதில் நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில், முதல்வர் ராஜசேகர ரெட்டி முன்னிலையில், சுதாகர், பானுசந்தர் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
வருகிற தேர்தலில், இந்த இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்ய இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











