Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எங்களுக்கும் ஏதாவது கொடுங்க! - சேரன்
கனிமொழி என்ற படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.
இந்தப் படத்தின் தலைப்பை, முதல்வரின் மகள் கனிமொழி எம்பியின் அனுமதியோடு வைத்திருக்கிறார்களாம். கனிமொழி என்று பெயர்வைத்துவிட்டதாலோ என்னமோ, விஐபிக்கள் ஏராளமாய் குவிந்திருந்தனர்.
விழாவில் எல்லோருக்கும் மாலை சால்வை போட்டு மரியாதை செய்தனர். சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற பாலாவுக்கு விசேஷமாக சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கினர்.
விழாவில் இயக்குநர் சேரனைப் பேச அழைத்தபோது, இந்த சால்வை - மாலை அணிவித்தலைக் குறிப்பிட்டு இப்படிப் பேசினார்:
விருது பெற்ற கலைஞர்களை பாராட்ட மாலை சாலை போடாதீங்க. அதனால் என்ன பயனிருக்கிறது?
கிரிக்கெட்டில் அடிக்கிற சிக்ஸருக்கெல்லாம் பரிசு தர்றாங்க. அது போல பாலா, என்னைப் போன்றவர்கள் வாங்குகிற விருதுகளுக்கும் பரிசு கொடுக்கலாம். பணமா, நிலமா... அது என்னைப் போன்றவர்களுக்கு நிஜமாகவே உதவியா இருக்கும்.
வீட்டு மனை மாதிரி பரிசு கொடுத்தால் அது இன்னும் நல்லாருக்கும். அப்புறம் பாருங்க எத்தனை விருதுகளை வாங்குகிறோம் என்று..." என்றார்.