Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாலாவின் ரசிகன் நான்...ஆனால் காக்க வைக்கிறாரே!-கே.பி
தனது பட விழாவுக்கே வரலாமா வேண்டாமா என்று யோசிக்கும் மனிதரான பாலா அதிசயமாக, இன்று காலை நடந்த ஒரு புதுப்படப் பூஜைக்கு வந்திருந்தார்.
விழாவில் திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமாய் வந்திருந்தனர். எல்லோரையும் பேசச் சொல்லிவிட்டதால் போதும் போதும் எனும் அளவு பேசித் தீர்த்தார்கள். 3 மணி நேரத்துக்கும் அதிகமான பேச்சு.
சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான கே பாலச்சந்தர் மைக் பிடித்தார். அவர் கூறுகையில், "நான் உண்மையைச் சொல்றேன்... பாலா மாதிரியெல்லாம் என்னால படம் எடுக்க முடியலியேன்னு வெட்கமாக இருக்கிறது. நான் பாலாவின் தீவிர ரசிகன். அவர் படங்களைப் பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன்.
கத்துக்கிறதுக்கு வயசு ஏது? கத்துக்கிட்டு அவர் மாதிரி படம் எடுப்பேனான்னு கேக்காதீங்க... அது முடியாம கூட போகலாம். ஆனா பாலா படங்களிலிருந்து கத்துக்கிறேன் என்பது உண்மை.
அத்தனை அற்புதமான படைப்பாளி... ஆனா அநியாயத்துக்கு காக்க வைக்கிறாரே... பாலா நீங்க ஒரு படம் கொடுக்க 6 மாசம் எடுத்துக்குங்க. ஒரு வருஷம் கூட ஓகே... ஆனா அதுக்குள்ள படத்தை கொடுத்திடுங்க. என்னால பொறுமையா இருக்க முடியல..." என்றார்.
அமைதியாக பாலச்சந்தரையே பார்த்துக் கொண்டிருந்தார் பாலா. பின்னர் பேசச் சொல்லி அவரை அழைக்க, 'நான் என்னைக்கு பேசியிருக்கேன்!' என்பது போல பார்த்துவிட்டுச் சிரித்தார். பின்னர் பாலச்சந்தரிடம் பேசிவிட்டு கிளம்பினார்.