Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாலாவின் ரசிகன் நான்...ஆனால் காக்க வைக்கிறாரே!-கே.பி
தனது பட விழாவுக்கே வரலாமா வேண்டாமா என்று யோசிக்கும் மனிதரான பாலா அதிசயமாக, இன்று காலை நடந்த ஒரு புதுப்படப் பூஜைக்கு வந்திருந்தார்.
விழாவில் திரையுலகப் பிரமுகர்கள் ஏராளமாய் வந்திருந்தனர். எல்லோரையும் பேசச் சொல்லிவிட்டதால் போதும் போதும் எனும் அளவு பேசித் தீர்த்தார்கள். 3 மணி நேரத்துக்கும் அதிகமான பேச்சு.
சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான கே பாலச்சந்தர் மைக் பிடித்தார். அவர் கூறுகையில், "நான் உண்மையைச் சொல்றேன்... பாலா மாதிரியெல்லாம் என்னால படம் எடுக்க முடியலியேன்னு வெட்கமாக இருக்கிறது. நான் பாலாவின் தீவிர ரசிகன். அவர் படங்களைப் பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன்.
கத்துக்கிறதுக்கு வயசு ஏது? கத்துக்கிட்டு அவர் மாதிரி படம் எடுப்பேனான்னு கேக்காதீங்க... அது முடியாம கூட போகலாம். ஆனா பாலா படங்களிலிருந்து கத்துக்கிறேன் என்பது உண்மை.
அத்தனை அற்புதமான படைப்பாளி... ஆனா அநியாயத்துக்கு காக்க வைக்கிறாரே... பாலா நீங்க ஒரு படம் கொடுக்க 6 மாசம் எடுத்துக்குங்க. ஒரு வருஷம் கூட ஓகே... ஆனா அதுக்குள்ள படத்தை கொடுத்திடுங்க. என்னால பொறுமையா இருக்க முடியல..." என்றார்.
அமைதியாக பாலச்சந்தரையே பார்த்துக் கொண்டிருந்தார் பாலா. பின்னர் பேசச் சொல்லி அவரை அழைக்க, 'நான் என்னைக்கு பேசியிருக்கேன்!' என்பது போல பார்த்துவிட்டுச் சிரித்தார். பின்னர் பாலச்சந்தரிடம் பேசிவிட்டு கிளம்பினார்.