twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பத்து பேரை அடிக்கும் நோஞ்சான் நடிகர்-என்னிடம் மோதத் தயாரா? அன்புமணி சவால்!

    By Chakra
    |

    Anbumani
    மேட்டூர்: நிஜத்தில் சண்டை போடவே தெரியாத ஒரு நோஞ்சான் நடிகர் பத்து பேரை போட்டு அடிக்கிறார். அவர் தைரியம் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதத் தயாரா என்று கேட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

    மேட்டூர், மேச்சேரியில் பாமக சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டு அன்புமணி பேசுகையில், சினிமாக்காரர்களை கடுமையாக சாடினார். குறிப்பாக ஹீரோக்களை விளாசித் தள்ளினார்.

    கடந்த 43 ஆண்டுகளாக சினிமாக்காரர்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். இன்றைய இளைஞர்கள் நடிகர்களின் கட் அவுட்டிற்கு பால், பீர் அபிஷேகம் செய்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

    திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களால் சமுதாயம் பாதிக்கிறது. இளைஞர்களை பார்த்து எந்த நடிகரோ, கட்சித் தலைவரோ மது அருந்தாதீர்கள், புகை பிடிக்காதீர்கள், திரைப்படம் பார்த்து கெட்டு போகாதீர்கள் என்று சொன்னது உண்டா?

    நல்ல திரைப்படங்கள் இப்போது வருவதில்லை. குத்துப்பாட்டு, அரைகுறை ஆடைகளோடு, ஆடல்- பாடல்களுடன் காட்சிகள் அமைகின்றன.

    தொலைக்காட்சி தொடர்களில் மாமியார் கொடுமை, மருமகள், மாமியாரை கொல்வது, உள்பட குடும்ப வன்முறை தொடர்கள்தான் வருகின்றன. இவற்றை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

    நடிகர், நடிகையரின் கட்சியை நம்பி சிலர் ஓடுகிறார்கள். தமிழகத்தில் 43 ஆண்டுகளாக திரைப்பட துறையை சேர்ந்தவர்கள்தான் முதல்வர்களாக இருந்துள்ளனர். மற்றவர்களுக்கு ஆளும் திறமை தகுதி இல்லையா?

    கையில் கற்பூரம் ஏந்துகிறார்கள். அவர் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அங்கபிரதட்சணம் செய்கிறார்கள். மண் சோறு சாப்பிடுகிறார்கள். முட்டிபோட்டு மலை ஏறுகிறார்கள்.

    கட்- அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்கிறார்கள். நடிகர் சம்பாதிக்க இப்படியெல்லாம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு சென்று விடு கிறார்கள். திரைப்படம் ஒரு பொழுது போக்குதான். அதில் வரும் காட்சி நிஜம் அல்ல.

    ஒரு நோஞ்சான் நடிகர் 10 பேரை அடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே சண்டை போட தெரியாது. உண்மையிலேயே சண்டை போட வேண்டுமென்றால் என்னிடம் வரட்டும், நான் வெற்றி பெற்று காட்டுகிறேன். எனக்கு டூப் போடத் தெரியாது. தமிழகத்தில் உண்மையான கதாநாயகன் டாக்டர் ராமதாஸ்தான் என்றார் அன்புமணி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X