Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் Vs கே ஆர்ஜி!
இதற்கான வேட்பு மனுவை கே ஆர்ஜி நேற்று தாக்கல் செய்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜுலை) 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜுலை 11-ந் தேதி ஓட்டுப்பதிவு.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ராம.நாராயணனை எதிர்த்து, கே.ஆர்.ஜி. போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை நேற்று மாலை தாக்கல் செய்தார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏற்கெனவே 8 ஆண்டுகள் தலைவராக இருந்தவர் கே.ஆர்.ஜி. தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவராக 4 ஆண்டுகள் பதவி வகித்தவர்.
ராம.நாராயணன் ஏற்கனவே 2 முறை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். முதலில் இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எண்ணமில்லை என்று கூறிவந்தார். ஆனால் தனது முடிவை மாற்றிக் கொண்டு இப்போது 3-வது முறையாக இந்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து ராம நாராயணன் கூறுகையில், "ஒட்டு மொத்த திரையுலகின் நலன் கருதியும், அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கவும் இந்த முறையும் தேர்தலில் நிற்கிறேன். என்னைப் பற்றி கவுன்சில் உறுப்பினர்களுக்குத் தெரியும்..." என்றார்.
சிறு படத் தயாரிப்பாளர்களுக்காக...
தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து கேஆர்ஜி கூறுகையில், "பதவி ஆசையால் நான் போட்டியிடவில்லை. சிறிய படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற இப்போது களமிறங்குவது முக்கியமானதாக உள்ளது" என்றார்.