Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் Vs கே ஆர்ஜி!
இதற்கான வேட்பு மனுவை கே ஆர்ஜி நேற்று தாக்கல் செய்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜுலை) 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜுலை 11-ந் தேதி ஓட்டுப்பதிவு.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ராம.நாராயணனை எதிர்த்து, கே.ஆர்.ஜி. போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை நேற்று மாலை தாக்கல் செய்தார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏற்கெனவே 8 ஆண்டுகள் தலைவராக இருந்தவர் கே.ஆர்.ஜி. தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவராக 4 ஆண்டுகள் பதவி வகித்தவர்.
ராம.நாராயணன் ஏற்கனவே 2 முறை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். முதலில் இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எண்ணமில்லை என்று கூறிவந்தார். ஆனால் தனது முடிவை மாற்றிக் கொண்டு இப்போது 3-வது முறையாக இந்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து ராம நாராயணன் கூறுகையில், "ஒட்டு மொத்த திரையுலகின் நலன் கருதியும், அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கவும் இந்த முறையும் தேர்தலில் நிற்கிறேன். என்னைப் பற்றி கவுன்சில் உறுப்பினர்களுக்குத் தெரியும்..." என்றார்.
சிறு படத் தயாரிப்பாளர்களுக்காக...
தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து கேஆர்ஜி கூறுகையில், "பதவி ஆசையால் நான் போட்டியிடவில்லை. சிறிய படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற இப்போது களமிறங்குவது முக்கியமானதாக உள்ளது" என்றார்.