Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சிக்கலில் 'அக்கு' ஜோடி!
சமீபத்தில் திரைக்கு வந்த வித்தியாசமான படம் அக்கு. இதில் ஹீரோவாக நடித்திருந்தவர் அஜய். 26 வயதாகும் இவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் வட பழனியைச் சேர்ந்த ஸ்ரீஜி. இவரது பூர்வீகம் கேரளா.
படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் படத்திலும், படத்திற்கு வெளியிலும் நெருங்கிப் பழகினர்.
இருவரும் கல்யாணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். ஆனால் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
அக்கு படத்தோடு அஜய்க்கு வாய்ப்புகள் நின்று போய் விட்டன. இதனால் அவர் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக ஸ்ரீஜியை நோக்கி நிறையப் பட வாய்ப்புகள் வந்தன. இதனால் அவர் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
இது அஜய்க்குப் பிடிக்கவில்லை. தினசரி ஷூட்டிங், ஷூட்டிங் என்று இரவு நெடு நேரம் கழித்து அவர் வந்ததால் சந்தேகப்பட ஆரம்பித்தார். நடிக்கக் கூடாது என்று கூறினார். ஆனால் அதை ஸ்ரீஜி ஏற்கவில்லை. தொடர்ந்து நடிக்கப் போவதாக கூறினர்.
இந்த வாய்ச்சண்டை பின்னர் அடிதடியாகவும் மாறியதாக தெரிகிறது. இதையடுத்து வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் அஜய் மீது புகார் கொடுத்தார் ஸ்ரீஜி. இதையடுத்து அஜய்யை போலீஸார் விசாரணைக்கு வரவழைத்தனர்.
இருவரையும் அமர வைத்து விசாரித்தபோது, அஜய்க்குப் புதிய படம் எதுவும் இல்லை. நானும் நடிக்காவிட்டால் குடும்பம் நடத்துவது எப்படி. எனவே நான் தொடர்ந்து நடிப்பேன். அதில் மாற்றம் இல்லை என்றார்.
பதிலுக்கு அஜய், ஸ்ரீஜி நடிக்கப் போகக் கூடாது. அதில் எந்த மாற்றமும் இல்லை என்று பிடிவாதமாக கூறினார்.
இதையடுத்து வருகிற 28ம் தேதி விசாரணைக்கு வருமாறும், அதற்குள் சமரசமாக போக முயற்சியுங்கள் என்று போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.