twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராணாவுக்குப் பிறகு எந்திரன் -2... தயாராகும் சன் பிக்ஸர்ஸ்!!

    By Shankar
    |

    ராணாவுக்குப் பிறகு சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்க எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் பிரமாண்டமாகத் தயாராகிறது. இந்தத் தகவலை படத்தின் ஒளிப்பதிவாளரான ரத்னவேலு தெரிவித்துள்ளார்.

    உலக அளவில் பெரும் வசூலைக் குவித்த இந்தியப்படம் என்ற பெருமையைப் பெற்றது ரஜினியின் எந்திரன்.

    இந்தப் படம் இந்தியாவில் மட்டும் ரூ 400 கோடிகளைக் குவித்தது. அடுத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராணாவில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினி.

    இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஹேமமாலினி, தீபிகா படுகோன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. ஏப்ரல் மாதல் தொடங்கி, தொடர்ந்து ஓராண்டுள் இந்தப் படப்பிடிப்பு நடக்கிறது.

    இந்த நிலையில், ராணா முடிந்தபிறகு, ரஜினி - சன் பிக்ஸர்ஸ் மீண்டும் இணைவதாக ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "எந்திரன் -2 குறித்த பேச்சுவார்த்தை நடந்துட்டு இருக்கு. ஷங்கர் சார் '3 இடியட்ஸ்" முடிச்சிட்டு வரணும். நாங்க 'ராணா" முடிக்கணும். எல்லாம் முடிஞ்சதும் 'ரோபோ-2" தொடங்கும்னு நினைக்கிறேன். ரஜினி, ஷங்கர், சன் டி.வி, ரஹ்மான் அப்புறம் நான். அனேகமா, அதே டீமாக இருக்கலாம். ஷங்கர் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணிட்டு இருக்கார்..." என்று கூறியுள்ளார் ரத்னவேலு.

    English summary
    Here is the sweet surprise for all Rajini fans in the globe. Yes... the superstar is going to join handss with ace director Shankar again for Enthiran 2. Produced by Sun pictures, the film will be launched only after the release of Rana.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X