Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கேன்ஸ் திரைப்பட விழா: ஈழத்துக் கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
தற்போது 62-வது திரைப்பட விழா கேன்ஸ் நகரில் நடக்கிறது.
இந்த ஆண்டு இந்த விழாவின் சிறப்பு அம்சம், ஈழத்துக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்றிருப்பதுதான்.
நதி என்ற குறும்படம் மூலம் இயக்குநரான மகேந்திரன் பாஸ்கர் இம்முறை இரு மேலும் இரு திரைப்படங்களை இயக்கி அவற்றை கேன்ஸ் விழாவுக்கு அனுப்பியுள்ளார்.
இதில் 'வலி' என்ற திரைப்படம் குறும்படங்களுக்கான் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு உதயா இசையமைத்துள்ளார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட காதல் கடிதம் படத்துக்கு இசையமைத்தவர், உதயா.
மற்றொரு படம் 'ECLUSE' எனும் பெயரில் பாஸ்கர் இயக்கிய பிரெஞ்சு மொழி திரைப்படமாகும். இந்தப் படத்தைத் தயாரித்துள்ளவர் பிஎல் தேனப்பன். அட நம்ம ஊர் தேனப்பன்தாங்க. தனது ராஜலட்சுமி மூவீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் கேன்ஸ் விழா போட்டிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் இது.
இந்தப்படத்துக்கு இசையமைத்து நடித்துள்ளவரும் பாஸ்கரே. அவருடன் எல்மோடன் நஸிமா, அபிநயா கணேஷ் தம்பையா போன்றவர்களும் நடித்துள்ளனர். பிஆர்ஓ நிகில்.
மே 13-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்த இந்த விழாவில் பிரான்சின் கலை பண்பாட்டுக் கழகக் கலைஞர்களான இயக்குனர் பாஸ்கர், படத்தொகுப்பாளர் சங்கர், ஒளிப்பதிவாளர் கீதன் ஆகியோர் பங்கு பெற்றனர். இவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தங்கள் பங்கேற்பை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் வகையில், ஈழத்தில் இலங்கை அரசு செய்து வரும் தமிழினப் படுகொலை, மனித உரிமை மீறல், போன்றவற்றை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கவனத்தை ஈர்த்தனர்.