Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கேன்ஸ் திரைப்பட விழா: ஈழத்துக் கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
தற்போது 62-வது திரைப்பட விழா கேன்ஸ் நகரில் நடக்கிறது.
இந்த ஆண்டு இந்த விழாவின் சிறப்பு அம்சம், ஈழத்துக் கலைஞர்கள் இந்த விழாவில் பங்கேற்றிருப்பதுதான்.
நதி என்ற குறும்படம் மூலம் இயக்குநரான மகேந்திரன் பாஸ்கர் இம்முறை இரு மேலும் இரு திரைப்படங்களை இயக்கி அவற்றை கேன்ஸ் விழாவுக்கு அனுப்பியுள்ளார்.
இதில் 'வலி' என்ற திரைப்படம் குறும்படங்களுக்கான் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு உதயா இசையமைத்துள்ளார். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட காதல் கடிதம் படத்துக்கு இசையமைத்தவர், உதயா.
மற்றொரு படம் 'ECLUSE' எனும் பெயரில் பாஸ்கர் இயக்கிய பிரெஞ்சு மொழி திரைப்படமாகும். இந்தப் படத்தைத் தயாரித்துள்ளவர் பிஎல் தேனப்பன். அட நம்ம ஊர் தேனப்பன்தாங்க. தனது ராஜலட்சுமி மூவீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் கேன்ஸ் விழா போட்டிப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் இது.
இந்தப்படத்துக்கு இசையமைத்து நடித்துள்ளவரும் பாஸ்கரே. அவருடன் எல்மோடன் நஸிமா, அபிநயா கணேஷ் தம்பையா போன்றவர்களும் நடித்துள்ளனர். பிஆர்ஓ நிகில்.
மே 13-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடந்த இந்த விழாவில் பிரான்சின் கலை பண்பாட்டுக் கழகக் கலைஞர்களான இயக்குனர் பாஸ்கர், படத்தொகுப்பாளர் சங்கர், ஒளிப்பதிவாளர் கீதன் ஆகியோர் பங்கு பெற்றனர். இவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தங்கள் பங்கேற்பை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் வகையில், ஈழத்தில் இலங்கை அரசு செய்து வரும் தமிழினப் படுகொலை, மனித உரிமை மீறல், போன்றவற்றை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கவனத்தை ஈர்த்தனர்.