விக்ரம் கனவில் ஸ்ரேயா - ரீமா இத்தாலியில் குத்தாட்டம்!
இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், "ராஜபாட்டை பக்கா கமர்சியல் படம். விக்ரம் ஜிம்பாய் கேரக்டரில் வருகிறார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. நான் சொன்னதை உள்வாங்கி விக்ரம் மிக பிரமாதமாக நடித்துள்ளார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். அவருக்கு இன்னும் ஒரு கதை சொல்லி உள்ளேன். கண்டிப்பாக மீண்டும் படம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
விக்ரம் கனவு காண்பது போன்ற பாடல் காட்சியொன்று உள்ளது. இதில் ஸ்ரேயா, ரீமாசென் இருவரும் நடிகைகளாகவே வந்து நடனம் ஆடுகின்றனர். இப்பாடல் காட்சி இத்தாலியில் படமாக உள்ளது.
அடுத்து விஷ்ணுவை வைத்து படம் இயக்குகிறேன். இது தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் வேறு ஹீரோ.
எனக்கென்று தனி பாணி கிடையாது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல என்று வித்தியாசமான கதைகளை படமாக்குவதே திட்டம்," என்றார் சுசீந்திரன்.
ராஜபாட்டையில் ரீமா - ஸ்ரேயா இணைந்து குத்தாட்டம் போடுகின்றனர் என நாம் முதலில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால் அப்போது இயக்குநர் சுசீந்திரன் இதை மறுத்து பேட்டியளித்தது நினைவிருக்கலாம். இப்போது அவரே அந்த செய்தியை ஒப்புக் கொண்டுள்ளார்!


Click it and Unblock the Notifications












