தள்ளிப் போன ரேணிகுண்டா!

படத்தின் சில காட்சிகள் கடுமையான ஆட்சேபத்துக்குரியதாக இருந்ததால் சென்சார் அதிகாரி மற்றும் உறுப்பினர்கள் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டதால், அடுத்த வாரம் மீண்டும் மறு தணிக்கைக்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிகிறது.
கடந்த சில நாட்களாகவே இந்தப் படம் குறித்து பாஸிடிவான விளம்பரங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென படம் தள்ளிப் போனதால் விநியோகஸ்தர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்தப் படத்தில் சிலம்பரசன் பாடிய ஒரு பாடல் ஏற்கெனவே ஹிட்டாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 4ம் தேதி நிச்சயம் படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











