ராஜ்கிரண் படம்- வடிவேலு இல்லை

ஒரு காலத்தில் கோடி ரூபாய் சம்பளம் வாங்கி மகா பிசி நடிகர் ராஜ்கிரண். ஆனால் காலத்தின் கோலமாய் அவரது மார்க்கெட் படுத்துப் போனது.
ஆனால் சமீப காலமாக அருமையான கேரக்டர்களில் அசத்திக் கொண்டிருக்கிறார் ராஜ்கிரண். நந்தா படத்தில் வித்தியாசமாக நடிக்கப் போய் அவரது 2வது இன்னிங்ஸ் அபாரமாக போய்க் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் புதிய படம் ஒன்றை தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கப் போகிறார் ராஜ்கிரண்.
இப்படத்திற்கு திருமங்கலத்தில் யானை என வித்தியாசமான பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். இருவரும் புதுமுகங்கள்.
படத்தில் காமெடியைக் கவனிக்கப் போகிறவர் வடிவேலு அல்ல விவேக். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
அதேபோல ராஜ்கிரண் படம் என்றால் நிச்சயம் இளையராஜாதான் இசையமைப்பார். ஆனால் பரத்வாஜ் இசையமைக்கக் கூடும் என்ற பேச்சும் நிலவுகிறது.
விரைவில் விவரங்களை அறிவிக்கவுள்ளாராம் ராஜ்கிரண்.


Click it and Unblock the Notifications











