Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'பத்துமே குத்தா'..?-வைரமுத்து வேதனை
மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரையும், எம்மகன் படத்தையும் இயக்கிய எம்.திருமுருகன் இப்போது, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் பரத் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். டத்தோ ரெனா.துரைசிங்கம் பிள்ளை தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுத, வித்யாசாகர் இசையமைத்து இருக்கிறார்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை நடிகர் விஜய் வெளியிட, நடிகர் பிரபு பெற்றுக்கொண்டார்.
விழாவில் வைரமுத்து பேசுகையில்,
தமிழ் திரையுலகை விட்டு மெலடி எனப்படும் சுகமான கானங்கள் வெளியே போய்விடக் கூடாது. குத்து பாடல்கள் தேவைதான். அது பாகவதர் காலம் முதல் பரத் காலம் வரை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் இசையில் ஒரு அங்கம்தான்.
பத்து பாடல்களில் ஒரு குத்து பாட்டு இருக்கலாம். தப்பில்லை. பத்துமே குத்து என்றால், தாங்க முடியுமா... இலையில் ஊறுகாய் மாதிரிதான் அவை இருக்க வேண்டும். இலை முழுவதும் ஊறுகாயாக இருக்கக் கூடாது. மெலடி' பாடல்களுக்குத்தான் என்றைக்கும் மதிப்பு இருக்கும்.
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் பாடல்களில் விரசம் வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.
இப்போது ஆங்கில படங்கள் தமிழ்ப்படுத்தப்படுகின்றன. அவற்றின் பிரமாண்டங்களை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டனர். அந்தப் படங்கள் அடித்தட்டு மக்களுக்கும் போய்ச் சேர்ந்து விட்டதால் இன்றாக்கு நிலைமை மோசமாகி வருகிறது.
அந்த பிரமாண்டத்தைத் தமிழில் பார்க்க முடியவில்லையே என்ற நினைப்பில் தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்கும் அபாயம் உண்டாகியிருக்கிறது. எனவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் உருவாக வேண்டும் என்றார் வைரமுத்து.
அவருக்கு முன் பேசிய நடிகர் விஜய், நான் ஏற்கெனவே பல மேடைகள்ல சொல்லியிருக்கேன். எனக்கு மெலடியை விட குத்துப் பாட்டுதான் ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துல ரெண்டு குத்துப்பாட்டு இருக்கு, ரெண்டுமே சூப்பர் என்றார்.
அவருக்கு அடுத்துப் பேசிய வைரமுத்துவோ குத்துப் பாடல்களைக் குத்திக் கிழிக்க, அரங்கம் பரபரப்பானது. ஆனால் முகத்தில் எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார் விஜய்.
விழாவில் பட அதிபர்கள் டி.ஜி.தியாகராஜன், ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் வித்யாசாகர், டைரக்டர் திருமுருகன் தயாரிப்பாளர் டத்தோ ரெனா. துரைசிங்கம் பிள்ளை, ஐங்கரன் பிலிம்ஸ் கருணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.