Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அல்வா தராததற்கு நன்றி-ஆர்யா
ஆர்யா நடித்த மதராசபட்டினம் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதையடுத்து ஊர் ஊராகப் போய் ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார்கள் படக் குழுவினர்.
நெல்லையில் உள்ள ராம் தியேட்டரில் மதராசபட்டினம் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த கருத்துக்களை கேட்பதற்காகவும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் நடிகர் ஆர்யா அங்கு வந்தார். அவருடன் கதாநாயகி ஏமி ஜாக்சன், இயக்குநர் விஜய், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர்கள் பாலாஜி, சதீஷ் ஆகியோரும் வந்தனர்.
அனைவருக்கும் செண்டை மேளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைப் பார்த்து கதாநாயகியான இங்கிலாந்தின் ஏமி குஷியடைந்தார்.
பின்னர் மதியக் காட்சியின் இடைவேளையின்போது ஆர்யா, ஏமி ரசிகர்கள் முன் தோன்றி பேசினர்.
ஆர்யா பேசுகையில், நான் 10 படம் நடித்துள்ளேன். இது எனது 10-வது படம். மதராசபட்டினம் படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெற்றி பெற்று உள்ளது.
இந்த படம் சுதந்திரத்துக்கு முந்தைய கதை. அதாவது 1946-ம் ஆண்டு வெள்ளைக்கார பெண் ஒரு கூலித்தொழிலாளியை காதலித்த கதை என்பதால் ரசிகர்கள் படத்தை ரசனையோடு பார்க்கிறார்கள்.
சண்டைக் காட்சி உள்பட அனைத்து காட்சிகளும் ரிஸ்க் எடுத்து எடுக்கப்பட்டு உள்ளது.
கோவை, மதுரை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து உள்ளோம். அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் படத்தை பாராட்டி உள்ளனர்.
திருநெல்வேலி எனக்கு ரொம்ப பிடித்து உள்ளது. நீங்கள் எனக்கு அல்வா கொடுக்கவில்லை என்றார் ஆர்யா.