Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கன்னடத்தில் சாதனை படைக்கும் ஆப்தரக்ஷகா!
இப்போது ஆப்தமித்ராவின் இரண்டாம் பாகத்தை 'ஆப்தரக்ஷகா' என்னும் பெயரில் பி வாசு அவர்கள் இயக்கி வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திலும் மறைந்த விஷ்ணுவர்தன்தான் நாயகன். கடந்த 19-ம் தேதி கர்நாடகாவில் வெளியான ஆப்தரக்ஷகா பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
இந்தப் படத்தில் விஷ்ணுவர்தன், சந்தியா, விமலா ராமன் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் நடித்த 200 வது படம், கடைசி படம் என்ற பெருமைக்குரியது ஆப்தரக்ஷகா.
கர்நாடகாவில் இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. வெளியான இரண்டே நாட்களில் ரூ 1.45 கோடியை வசூலாகக் குவித்துள்ளது ஆப்தரக்ஷகா.
ரசிகர்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். ஒரு டிக்கெட்டின் விலை ரூ 3000 வரை விற்கப்படுவதாகவும், அப்படியும் கூட ரசிகர்களுக்கு சுலபத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் பெங்களூருவிலிருந்து வரும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
'விஷ்ணுவர்தன் என்ற மாபெரும் கலைஞனின் பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் விதத்தில் இந்தப் படம் அமைந்துள்ளது. கன்னடத்தில் இதுவரை வந்த படங்களில் மிகச் சிறப்பான படம் ஆப்தரக்ஷகா. கண்டிப்பாக அனைத்து ரசிகர்களும் பார்க்க வேண்டும்', என்று பத்திரிகை விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் பி வாசு கூறுகையில்,
"ஆப்தரக்ஷகா-2" படத்துக்கு கன்னடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனை தமிழில் இயக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கான முயற்சியில் இருக்கிறேன். படத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினி அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இப்போது ஆர்கே நாயகனாக நடிக்கும் 'புலிவேஷம்' படத்தை தமிழில் இயக்கி வருகிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு ஷெட்யூல் மட்டுமே முடிந்துள்ளது..." என்றார்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!