Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு எதிராக சதி-நயனதாரா
ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசடர் பொறுப்பிலிருந்து நயனதாராவை நீக்கி விட்டனர். இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் நயனதாரா.
தனது நீக்கம் ஒருவரின் சதியால் வந்தது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கூட இருந்தே குழி பறித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நயனதாரா கூறுகையில், என்னிடம் சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எந்தவித ஒப்பந்தமும் போடவில்லை. எனக்கு நிறையப் படப்பிடிப்பு உள்ளது என்று முதலிலேயே கூறினேன். அதற்கு அவர்கள் பரவாயில்லை, சென்னையில் மொத்தம் 6 போட்டிகள் நடக்கின்றன. அதில் 3 போட்டிகளுக்கு மட்டும் வந்தால் போதும் என்றனர்.
இந்த நிலையில் திடீரென ஒரு நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்துள்ளோம். வர வேண்டும் என்றனர். திடீரென சொன்னால் எப்படி, 2 நாள் முன்பே சொல்லியிருக்கலாமே என்று கேட்டதற்கு அவர்களிடமிருந்து பதில் இல்லை.
அணி அறிமுக விழாவில் நான் விஜய்யுடன் சேர்ந்து கலந்து கொண்டேன். முதல் போட்டிக்கு நான் வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில் திடீரென உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டது. என்னிடம் அதற்கான டாக்டர் சான்றிதழும் இருக்கிறது.
இப்போது என்னை நீக்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது. இது அதிர்ச்சியாக உள்ளது. இன்னும் 5 போட்டிகள் உள்ளன. அதில் 3 போட்டிகளுக்கு அவர்கள் சொன்னது போலவே வந்திருப்பேனே.
எனக்கு எதிராக சதி நடந்துள்ளது. அதில் ஈடுபட்டது யார் என்று எனக்குத் தெரியும். இப்போது அதை சொல்ல விரும்பவில்லை. கூட இருந்தே குழி பறித்துள்ளனர். அந்த தந்திரம் எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் நான் பதிலடி கொடுப்பேன் என்றார் நயனதாரா.
நயனதாரா நீக்கம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.