Don't Miss!
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Finance இவங்களுக்கு எல்லாம் ஜாக்பாட்.. பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டாம்..!
- News ஆஹா.. உபி-இல் பாஜகவுக்கு தலைவலி! ராஜ்புத் சமூகம் எடுத்த முடிவால் பெரிய சிக்கல்! கையை பிசையும் தலைகள்
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விவாகரத்து ஆகாது- லலிதகுமாரி
எனக்கும் எனது கணவருக்கும் இதுவரை விவாகரத்து ஆகவில்லை. அப்படி ஆகாது என்று நம்புகிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜின் மனைவி லலிதகுமாரி கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி வில்லனும் குணச்சித்திர நடிகருமான பிரகாஷ்ராஜ், மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்யப்போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
பிரகாஷ் ராஜ் சென்னைக்கு நடிக்க வந்த புதிதில், டிஸ்கோ சாந்தி வீட்டு மாடியில்தான் குடியிருந்தார். அப்போது அவருக்கும், சாந்தியின் தங்கையும், நடிகையுமான லலிதகுமாரிக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இத்தனை கால திருமண வாழ்க்கைக்குப் பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் பிரகாஷ் ராஜ். இதனால்தான் அவருக்கும், லலிதகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
மேலும், தனது மேக்கப்வுமன் போனிவர்மாவை பிரகாஷ் ராஜ் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில்தான் விவாகரத்து முடிவுக்கு வந்தார் பிரகாஷ் ராஜ். தானும், தனது மனைவியும் பிரிந்தாலும் கூட, எங்களது குழந்தைகளுக்கு நாங்கள் அம்மா, அப்பாவாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரகாஷ் ராஜின் முடிவு குறித்து லலிதகுமாரி கூறுகையில், எனக்கும் எனது கணவருக்கும் இதுவரை விவாகரத்து ஆகவில்லை. அப்படி எதுவும் ஆகாது என்று நம்புகிறேன். இதற்கு மேல் எதுவும் கூற விரும்பவில்லை என்றார்.