Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
40 சதவிகித பங்குகளை விற்கிறது பிரமிட் சாய்மிரா!
இதற்காக ரூ.100 கோடியை பிரமிட் சாய்மிராவில் முதலீடு செய்கிறது அந்த கொல்கத்தா நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயரை வெளியிட பிரமிட் சாய்மிரா தலைவர் பிஎஸ் சாமிநாதன் மறுத்துவிட்டார்.
மேலும் தங்களது தொலைக்காட்சி தயாரிப்புப் பிரிவையும் அமெரிக்க திரையரங்கு பிரிவையும் முழுவதுமாக விற்கப் போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தை மறுசீரமைத்து மீண்டும் முழு வேகத்தில் செயல்படவே இந்த நடவடிக்கைகள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் நிறுவன மேம்பாட்டுக்காக கடன் பத்திரம் வெளியிடுவது, சர்வதேச அளவில் பிணைப் பத்திர விற்பனை உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் மூலம் ரூ.500 கோடியைத் திரட்டவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அனைத்து விவரங்களையும் செபிக்கு தெரிவித்துள்ளது பிரமிட் சாய்மிரா.
திரட்டப்படும் புதிய நிதியைப் பயன்படுத்தி, தற்போது ஆரம்பித்து பாதியில் நிற்கும் 17 திரைப்படங்களையும் முடித்து திரைக்குக் கொண்டுவருவோம் என பிரமிட் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
இதுதவிர, சாய்மிராவின் தொலைக்காட்சிப் பிரிவை தனியாகப் பிரித்து புதிய நிறுவனத்தை உருவாக்கப் போகிறார்களாம். இந்தப் புதிய நிறுவனத்தின் வர்த்தக இலக்கு ரூ.300 கோடி என்றும், இந்த நிறுவனமும் செபியில் பட்டியலிடப்படும் என்றும் தெரிகிறது. இந்தப் புதிய நிறுவனத்தின் 25 சதவிகித பங்குகளை பிரமிட் சாய்மிராவின் பழைய பங்குதாரர்களுக்கே தருவார்களாம். மேலும் 40000 பங்குகள் பிரமிட் சாய்மிராவில் நஷ்டமடைந்த பழைய பங்குதாரர்களுக்குத் தரப்படுமாம்.
தியேட்டர்கள் 750லிருந்து 250 ஆகக் குறைந்தன!
பிரமிட் சாய்மிரா வசம் முன்பு 750 திரையரங்குகள் இருந்தன. இப்போது அவை 250 ஆகக் குறைந்துவிட்டன. இனி திரையரங்க உரிமையாளர்களுடன் வருமானப் பகிர்வு அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என சாமிநாதன் கூறியுள்ளார்.
300 தமிழ் திரைப்படங்களின் திரையரங்க வெளியீட்டு உரிமைகளை ரூ.700 கோடி கொடுத்துப் பெற்றுள்ளது பிரமிட் சாய்மிரா என்பது குறிப்பிடத்தக்கது.
தங்களின் அமெரிக்க திரையரங்க பிரிவையும், ஃபன் ஏசியா நிறுவனத்தையும் விரைவில் விற்கிறது பிரமிட் சாய்மிரா. ஃபன் ஏசியாவை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்குகிறது.
சில தினங்களுக்கு முன்புதான் ஸ்பைஸ் மற்றும் ஆரோனா டெக்னாலஜிஸ் ஆகிய தனது துணை நிறுவனங்களை இழுத்து மூடியது சாய்மிரா. இதில் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 50 முதல் 60 கோடி ரூபாய்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!