தெலுங்கில் ரீமேக்காகும் காவலன்-பெல்லம்கொண்டா சுரேஷிடம் உரிமை
தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான பெல்லம்கொண்டா சுரேஷ் விஜய், அசின் நடித்துள்ள காவலன் படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளார்.
காவலன் திலீப், நயன்தாரா நடித்த பாடிகார்ட் என்னும் மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும். பாடிகார்ட் மற்றும் காவலன் படங்களை இயக்கியவர் சித்திக்.
காவலன் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக இல்லாத விஜய் படமாக இருப்பதால் படத்திற்கு நல்ல வரவேற்பு. குறிப்பாக ரிப்பீட் ஆடியன்ஸ் வருகையால் படம் வெற்றிப் படமாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது காவலன் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதற்கான உரிமையை சுரேஷ் வாங்கியுள்ளார்.
படங்களை ரீமேக் செய்வதில் கில்லாடியான சுரேஷ் இன்னும் ஹீரோ, ஹீரோயினைத் தேர்வு செய்யவில்லை. இந்தப் படத்தையும் சித்திக் தான் இயக்குவாரா என்றும் தெரியவில்லை.
இதற்கிடையே, காவலன் வெற்றியைத் தொடர்ந்து பாடிகார்ட் படம் விரைவில் சல்மான் கானை வைத்து இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இப்படத்தையும் சித்திக் தான் இயக்குவார் என்றும் தெரிகிறது. அனேகமாக ஆசினே நாயகியாகவும் நடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











