Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஆசையால் டைரக்டர் ஆனேன்- அபிஷேக்
மோகமுள் படம் மூலம் நடிகரானவர் அபிஷேக். பின்னர் டிவி சீரியல்கள் பக்கம் திரும்பி விட்டார். டிவியில் கதாநாயகனாக வலம் வந்த அவர் கோலங்கள் மெகா சீரியல் மூலம் பிரபலமானார்.
தற்போது கோலிவுட் இயக்குநர்கள் வரிசையில் அபிஷேக்கும் இணைந்து விட்டார். கதை படம்தான் அபிஷேக் டைரக்டராகும் முதல் படம்.
எப்படி டைரக்டரானீர்கள் என்று கேட்டால்,
எல்லா நடிகர்களுக்கும் ஒரு காலகட்டத்துக்குப்பின், டைரக்டர் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கும். நான் மும்பையில் இருந்தபோது, சில நாடகங்களை இயக்கி இருக்கிறேன். அந்த அனுபவத்தில், 6 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்காக ஒரு கதை எழுதினேன்.
நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என்று காத்திருந்தேன். ராஜன் ராதாகிருஷ்ணன் என்ற அற்புதமான தயாரிப்பாளர் கிடைத்தார். இவர், நந்தா, மவுனம் பேசியதே ஆகிய வெற்றி படங்களை தந்தவர்.
சமுதாயத்தில் அன்றாடம் நடக்கிற சம்பவங்கள்தான் கதை படத்தின் கதை. இந்த கதை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறும். ஒரு பெண் டைரக்டரிடம் இருந்து வரவேண்டிய கதை இது. இந்த படம் வந்தபின், தமிழ்நாட்டில் தற்கொலைகள் குறையும் என்றார் அபிஷேக்.
அப்படியானால் சரி.