Don't Miss!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- News அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
களஞ்சியம் 'கன்ட்ரோலில்' அஞ்சலி!
கற்றது தமிழ்தான் அஞ்சலி நடித்து வெளியான முதல் படம். அதில் அவருக்கு நல்ல நடிகை என்ற அறிமுகம் கிடைத்தது. ஆனால் அங்காடித் தெரு அவரை ஒரு ஸ்டார் நடிகையாக்கியது.
இப்படி இரு படங்களில் அஞ்சலிக்குப் பெயர் கிடைத்தாலும் அவர் முதலில் குட்டுப்பட்டது இயக்குநர் களஞ்சியத்தின் மோதிரக் கையால்தான். கற்றது தமிழ் படத்தில் நடிப்பதற்கு முன்பு அவர் களஞ்சியம் இயக்குவதாக இருந்த சத்தமின்றி முத்தமிடு படத்தில்தான் நடிக்க புக் ஆகியிருந்தார். அவருக்கு சுந்தரி என்ற பெயரையும் சூட்டியிருந்தார் களஞ்சியம்.
இப்படத்தில் தேவயானியின் தம்பியான மயூர் என்பவர் நாயகனாக புக் ஆகியிருந்தார். ஆனால் இந்தப் படம் பின்னர் டிராப் ஆகவே, அஞ்சலி என்ற பெயருடன் கற்றது தமிழ் படத்தில் நடிக்கப் போய் விட்டார்.
இருப்பினும் களஞ்சியம் அடுத்தடுத்து இயக்குவதாக இருந்த வாலிபதேசம், கருங்காலி, என் கனவுதானடி ஆகிய படங்களிலும் அஞ்சலி நாயகியாக புக் ஆகியிருந்தார். களஞ்சியத்தின் மீது இருந்த நம்பிக்கையால் இந்தப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் அஞ்சலி.
தற்போது அஞ்சலிக்கு நல்ல மார்க்கெட் கிடைத்திருப்பதால் கருங்காலி படத்தை முதலில் எடுத்து முடிக்க முடிவு செய்து களம் இறங்கி விட்டார் களஞ்சியம். அத்தோடு நில்லாமல் அதில் அவரே ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளாராம்.
கருங்காலி அஞ்சலியின் மார்க்கெட்டை ஸ்திரப்படுத்துவதோடு, களஞ்சியத்திற்கும் புது வாழ்வு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் களஞ்சியம் தரப்பு உள்ளதாம்.