Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமல் விழாவைப் புறக்கணித்த 'அம்மா'வுக்கு வினயன் கண்டனம்!
நடிகர் கமல் ஹாசனின் 50 வருட கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில், அவருக்கு கேரள அரசாங்கம் பாராட்டு விழா நடத்தியது. திருவனந்தபுரத்தில், கடந்த 22-ந் தேதி இந்த விழா நடைபெற்றது.
அதில் முதல்வர் அச்சுதானந்தன், கல்வி மந்திரி பேபி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அந்த விழாவில், மலையாள நடிகர்-நடிகைகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' என்ற அமைப்பு, அந்த விழாவைப் புறக்கணித்துவிட்டது. 50 ஆண்டு கலைச் சேவை செய்த மலையாள நடிகர்களுக்குப் பாராட்டு விழா எடுக்காமல் கமலுக்கு விழா எடுப்பதா என்று கேட்டது அந்த அமைப்பு.
என்றாலும் மலையாள பட அதிபர்கள், வினியோகஸ்தர்கள் திரளாக விழாவில் கலந்துகொண்டார்கள். கமல்ஹாசனுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்கள்.
இயக்குநர் வினயன் கண்டனம் :
அம்மாவின் இந்த செயலுக்கு பிரபல மலையாள இயக்குநர் வினயன் (காசி பட இயக்குநர்) கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "கமல்ஹாசன், மூன்று முறை தேசிய விருது பெற்றவர். அனைத்து தரப்பினராலும் விரும்பி நேசிக்கப்படுகிற மிக சிறந்த நடிகர். மலையாள பட உலகம் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். ஆரம்ப காலத்தில் 60-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து இருக்கிறார்.
தன்னை அடையாளம் காட்டியது மலையாள பட உலகம்தான் என்பதை அவர் எல்லா மேடைகளிலும் சொல்லி வருகிறார்.
அப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரு நடிகருக்காக நடந்த விழாவை, மலையாள நடிகர் சங்கம் (அம்மா) வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது. தனது எதேச்சாதிகாரப் போக்கைத் தொடர்கிறது. எனவே, அந்த அமைப்பை கலைக்க வேண்டும்...,'' என்று கூறியுள்ளார்.