Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கமல் விழாவைப் புறக்கணித்த 'அம்மா'வுக்கு வினயன் கண்டனம்!
நடிகர் கமல் ஹாசனின் 50 வருட கலைச்சேவையை கவுரவிக்கும் வகையில், அவருக்கு கேரள அரசாங்கம் பாராட்டு விழா நடத்தியது. திருவனந்தபுரத்தில், கடந்த 22-ந் தேதி இந்த விழா நடைபெற்றது.
அதில் முதல்வர் அச்சுதானந்தன், கல்வி மந்திரி பேபி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அந்த விழாவில், மலையாள நடிகர்-நடிகைகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' என்ற அமைப்பு, அந்த விழாவைப் புறக்கணித்துவிட்டது. 50 ஆண்டு கலைச் சேவை செய்த மலையாள நடிகர்களுக்குப் பாராட்டு விழா எடுக்காமல் கமலுக்கு விழா எடுப்பதா என்று கேட்டது அந்த அமைப்பு.
என்றாலும் மலையாள பட அதிபர்கள், வினியோகஸ்தர்கள் திரளாக விழாவில் கலந்துகொண்டார்கள். கமல்ஹாசனுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்கள்.
இயக்குநர் வினயன் கண்டனம் :
அம்மாவின் இந்த செயலுக்கு பிரபல மலையாள இயக்குநர் வினயன் (காசி பட இயக்குநர்) கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "கமல்ஹாசன், மூன்று முறை தேசிய விருது பெற்றவர். அனைத்து தரப்பினராலும் விரும்பி நேசிக்கப்படுகிற மிக சிறந்த நடிகர். மலையாள பட உலகம் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். ஆரம்ப காலத்தில் 60-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து இருக்கிறார்.
தன்னை அடையாளம் காட்டியது மலையாள பட உலகம்தான் என்பதை அவர் எல்லா மேடைகளிலும் சொல்லி வருகிறார்.
அப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரு நடிகருக்காக நடந்த விழாவை, மலையாள நடிகர் சங்கம் (அம்மா) வேண்டுமென்றே புறக்கணித்துள்ளது. தனது எதேச்சாதிகாரப் போக்கைத் தொடர்கிறது. எனவே, அந்த அமைப்பை கலைக்க வேண்டும்...,'' என்று கூறியுள்ளார்.