ஹ்ருத்திக் வைத்த மது விருந்து: நடிகர், நடிகைகள் அமளி- போலீஸ் எச்சரிக்கை

ரோஷன், மும்பையில் ஜுகு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் 9வது மாடியில் வசித்து வருகிறார். தனது தாயாரின் பிறந்த தினத்தையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் தனது வீட்டில், நண்பர்களுக்கு விருந்து அளித்தார்.
இதில் ஷில்பா ஷெட்டி, கரீனா கபூர், அமிஷா படேல், சோனாலி பெந்த்ரே, துல்ஷார் கபூர் உள்பட ஏராளமான இந்தி நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். இயக்குநர் கரண் ஜோகரும் கலந்து கொண்டார்.
மது விருந்துடன் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது பாடல்களை படு சத்தமாக வைத்துக் கொண்டு ஆடிப் பாடியுள்ளனர். இதனால் அக்கம் பக்கத்தினர் பெரும் தொந்தரவுக்கு ஆளானார்கள்.
அதிகாலை நேரத்தில் இப்படி அமர்க்களப்படுத்தி அக்கம் பக்கததினரின் நிம்மதியை சீர்குலைத்ததால், குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸுக்குப் போன் செய்தனர்.
விரைந்து வந்த போலீஸார், அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சத்தம் போட்டு, அமளி துமளி ஏற்படுத்திய நடிகர், நடிகைகளை கண்டித்தனர்.
இதனால் பாடல்களை நிறுத்தினர், ஆட்டம் பாட்டத்தையும் நிறுத்தினர். இருப்பினும் போலீஸார் அங்கிருந்து நகர்ந்தவுடன் தங்களது ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். பாடல்களின் சத்தத்தை குறைத்து வைத்துக் கொண்டு விடிய விடிய ஆடிப் பாடினர்.


Click it and Unblock the Notifications











