Don't Miss!
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஸ்டார் வீடு ரொம்ப ஜோரு!!
நடிகரும் இயக்குநருமான சேரன் தனது சொந்த ஊரான மேலூரில் ஒரு பங்களா கட்டி சமீபத்தில்தான் கிரகப் பிரவேசம் நடத்தியுள்ளார். அவரது பெற்றோரின் பல நாள் கனவாம் அது.
சேரனின் தந்தை மேலூரில் ஒரு திரையரங்கில் ஆபரேட்டராக இருந்தவர். சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற அவரது 40 ஆண்டு கால கனவு சேரன் மூலம் நிறைவேறி இருக்கிறது.
நட்சத்திர ஜோடிகளான சூர்யாவும்-ஜோதிகாவும் அடையாரில் ஒரு சொகுசு பங்களாவை விலைக்கு வாங்கியிருக்கிறார்களாம். ரூ.8 கோடி கொடுத்து அந்த பங்களாவை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய வீட்டில் தன் தாய், தந்தை என குடும்பத்தோடு குடியேறப் போகிறாராம் சூர்யா.
வளர்ந்து வரும் நடிகர் பிரசன்னா ஆழ்வார்திருநகரில் புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்.
நடிகைகள் மட்டும் சளைத்தவர்களா என்ன... இதோ அவர்களும் 'வூடு' கட்டி கலக்கிக் கொண்டுள்ளனர்.
புன்னகை இளவரசி சினேகா சென்னை ஆலப்பாக்கத்தில் பெரிய மாளிகை கடடி வருகிறார். தற்போது இண்டீரியர் வேலைகள் நடந்து வருகின்றன. அவரது அப்பாவே அதை நேரடியாக மேற்பார்வையிடுகிறாராம்.
விரைவில் அந்த வீட்டில் குடியேறப் போகிறார் குடும்பத்துடன். புது வீட்டில் முதல் நிகழ்வே, அவரது சகோதரர்களது திருமணம்தானாம் (தங்கச்சிக்கு எப்ப?).
அசின் மும்பையில் லோகண்ட் வாலா பகுதியில் ஒரு பிளாட் வாங்கி குடிபோய் விட்டார். பாவனா திருச்சூரில் வீடு கட்டிக் கொண்டிருப்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தோம்.
தென்னிந்தியை கனவு தேவதை, திரிஷா ஒரு பெரிய பண்ணை மாளிகையையே உருவாக்கிக் கொண்டிருக்கிறார், சென்னைக்குப் பக்கத்தில்.