Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து!
ரஜினி மேடை, கமல் மேடை, கலைஞர் மேடை... இப்படி மேடைக்கேற்றபடி நெளிவு சுளிவுடன் பேசுவதில் பிஎச்டி வாங்கியவர் வைரமுத்து. ஆளுக்கேற்ப பேசுவதிலும் அசகாய சூரர்.
நேற்று நடந்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மேடையில், நடிகைகளை அவர் வர்ணித்ததைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களே நெளிய வேண்டி வந்ததாம். நம்ம வைரமுத்துவா என்று சிலர் சற்றே முகம் சுளிக்கவும் செய்தார்களாம்.
எல்லோரும் கௌபாய் கதையைத் தேர்வு செய்த சிம்புதேவனைப் பாராட்டிக் கொண்டிருக்க, கவிஞர் வைரமுத்து மட்டும் நடிகை லட்சுமிராயை உச்சத்தில் வைத்துப் புகழ்ந்து தள்ளினார்.
அவர் பேசுகையில், "லட்சுமிராய் இந்த படத்தில் குதிரையில் ஏற்றமெல்லாம் செய்திருக்கிறார். உண்மையில் அந்த குதிரை கொடுத்து வைத்த குதிரை... இப்படி ஒரு வாய்ப்பு எந்தக் குதிரைக்கு கிடைக்கும்" என்ற ரீதியில் பேச, அதனைக் கேட்டு லட்சுமிராய் நெளிந்தபடி சிரித்து வைத்தார்.
இதில் ஹைலைட்டான விஷயமே, விழா முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்ற வைரமுத்து, தனது காரிலேயே லட்சுமிராயை கூட்டிச் சென்றதுதான்.
வைரமுத்துவின் காரும் கொடுத்து வைத்ததோ!