சிம்பு-பரத்துக்கு புது 'குரல்'!

தமிழ் சினிமாவி்ன் பிஆர் நடவடிக்கைகளை அதி நவீனமாக மாற்றியவர் இவர் எனலாம். லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சமாச்சாரங்களுடன் நவீன பிஆர் மேனேஜராக உலவி வரும் நிகில், திரையுலகின் முன்னணி நாயகர்கள், நாயகிகளுக்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்றி வரும் ஒரு அடக்கமான பிரபலம்.
இவரிடம் கொடுத்தால் எதுவும் சொதப்பாது என்ற நம்பிக்கை திரையுலகில் நிறைய உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் என அனைவரின் மதிப்பைப் பெற்றவர். கமல்ஹாசனின் பிஆர் குரலும் நிகிலே. அப்படிப்பட்டவரிடம் தற்போது வந்து சேர்ந்துள்ளனர் சிம்புவும், பரத்தும்.
இனிமேல் சிம்பு, பரத் தொடர்பான பிஆர் நடவடிக்கைகளை நிகில்தான் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஆர் மேனேஜராக இவர்களின் தற்போதைய திரையுலக நிலவரம் குறித்து நிகில் கூறுகையில், சிம்பு தற்போது வானம், போடா போடி படங்களில் பிசியாக ள்ளார்.
பரத் கையில் தற்போது பேரரசுவின் திருத்தணி, வானம், யுவன் யுவதி, மற்றும் சசியின் புதிய பெயரிடப்படாத படம் ஆகியவற்றுடன் பிசியாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











