Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சௌந்தர்யா ரஜினி மீது மேலும் ஒரு வழக்கு... வருமா கோவா?
இந்த வழக்கதைத் தொடர்ந்திருப்பவர் பெயர் கமலேஷ் கோத்தாரி. சென்னை தி நகராச் சேர்ந்த பைனான்சியர்.
கோவா படத்துக்காக சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னிடம் ரூ 2 கோடி கடன் பெற்றதாகவும், அந்த கடனை திருப்பிச் செலுத்தாமலேயே கோவா படத்தை வெளியிட முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவா படம் நாளை (ஜனவரி 29ம் தேதி) வெளியாக உள்ளதால், இந்தப் பணத்தை அதற்கான ராயல்டி தொகை ரூ 30 லட்சத்தோடு உடனடியாக திருப்பித் தரவேண்டும், இல்லாவிட்டால் படத்தை வெளியிடக்கூடாது என அந்த கோத்தாரி கூறியுள்ளார்.
இந்தக் கடனை கடந்த அக்டோபர் மாதம் பல தவணைகளாக சௌந்தர்யா பெற்றுள்ளார். சௌந்தர்யா ரஜினி மற்றும் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இருவரும் இணைந்தே கையெழுத்துப் போட்டு கடன் பெற்றதாக கோத்தாரி தெரிவித்துள்ளார்.
கமலேஷ் கோத்தாரி சார்பில் வக்கீல் அபுடுகுமார் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. செளந்தர்யா தரப்பில் வக்கீல் ஹரிசங்கர் ஆஜராகி நோட்டீசை பெற்றுக் கொண்டார்.
இந் நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ராமசுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பைனான்சியருக்கு தரவேண்டிய பணத்தைத் தந்துவிடுகிறோம். கோவா படத்துக்கு தடை விதித்துவிடாதீர்கள் என்று நீதிமன்றத்தில் சௌந்தர்யாவின் மகள் பதில் மனு தாக்கல் செய்தார்.
சௌந்தர்யா தரப்பில் வழக்கறிஞர் ஹரிசங்கர் ஆஜராகி, கடன் தொகையை திருப்பித் தர தயாராக இருக்கிறோம். படத்துக்கு தடைவிதிக்க வேண்டாம். சிறிது கால அவகாசம் தரவேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.