Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
படமாகும் குரோவர் கொலை!
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் அடுத்து எடுக்கவுள்ள புதிய திரைப்படமும் சம்பிரதாயங்களை உடைத்து லட்சுமணர் கோட்டை தாண்டுவதாகவே அமைந்திருக்கும் என தெரிகிறது.
சினர்ஜி ஆட்லேப்ஸ் என்கிற தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரியான நீரஜ் குரோவரை கன்னட நடிகை மரிய மோனிகா சூசைராஜும், அவரது காதலரான கொச்சி கடற்படை தள பொறியாளர் ஜெரோம் மாத்யூவும் திட்டமிட்டு படு கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
குரோவரைக் கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியதா மரியா கூறியுள்ளார். இதற்கு 4 மணி நேரம் பிடித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தை மையமாக வைத்து தனது அடுத்த படத்தை எடுக்கப் போவதாக பட் அறிவித்துள்ளார். படத்தின் கருவாக இந்த சம்பவம் இருக்குமே தவிர இதில் குரோவர், மரியா, மாத்யூ ஆகியோரை தவறாக சித்தரிக்கும் எண்ணம் இல்லை என்றும் பட் கூறியுள்ளார்.
ஒரு போலீஸ் அதிகாரியின் பார்வையில், சமூகத்தில் நிலவும் அவலங்கள், சம்பிரதாய மீறல்கள் ஆகியவற்றை இந்த படத்தின்மூலம் வெளிச்சம்போடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பட்டின் வெற்றிக் கூட்டாளியான ஷாகுஃப்தா ரபீக் தான் இந்த படத்துக்கும் திரைக்கதை எழுதுகிறார். மகேஷ் பட்டும், ரபீக்கும் மும்பை குற்றப்பிரிவு இணை கமிஷனர் ராகேஷ் மேத்தாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். நீரஜ் குரோவர் கொலை வழக்கில் துப்புதுலக்கிய அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கோண காதலால் விளைந்த இந்த கொடூர சம்பவத்தில் நன்கு படித்த மூன்று இளம்வயதினரின் வாழ்க்கை எப்படி பாழாகிறது என்பதுதான் படத்தின் நோக்கம். இதில் வேறு பப்ளிசிட்டி நோக்கம் இல்லை என்று வசனகர்த்தா ரபீக் கூறினார்.
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!