எனக்குப் பிடிக்காத நபர் ஆர்யா! - சொன்னவர் சூர்யா

சென்னையில் நேற்று நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசுகையில், "எனக்கு தமிழில் பிடிக்காத நடிகர் ஆர்யாதான். நான் இப்படிச் சொல்லக் காரணம் உண்டு.
என் வீட்டில் எல்லோரும் அமர்ந்து டிவி பார்க்கும் போது திடீரென்று பாடல் காட்சிகளில் ஆர்யாவின் சீன் வந்துவிட்டால் எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி, 'இந்தப் பையன் நல்லா அழகா இருக்கான்ல... நல்லா நடிக்கிறான்' என்று சொல்வார்கள். எனக்கு காதில் புகையே வரும்... அந்த அளவு கவர்ந்திருக்கார் எல்லோரையும்", என்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு படத்தின் நாயகியான நயன்தாரா வரவில்லை. இதுபற்றிக் குறிப்பிட்ட ஆர்யா, "நயன்தாரா இந்த விழாவுக்கு வராதது வருத்தமாக உள்ளது. இந்த மாதிரி ஆடியோ பங்ஷனுக்கு வர்றதில்லேன்னு அவங்க ஒரு பாலிஸிசே வச்சிருக்காங்களாம். அதான் வரலை... நமக்குத்தான் அந்த மாதிரி எந்தப் பாலிஸியும் இல்லை", என்றால் கிண்டலாக.


Click it and Unblock the Notifications











