Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மகிழ்ச்சிக்குத் திரும்பிய கரீஷ்மா
கரீனா கபூரும், சைப் அலிகானும் கொஞ்ச காலமாக தீவிரமாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் நலனை மட்டும் பார்க்காமல் கரீஷ்மாவின் இல்லற சிக்கலுக்கும் தற்போது தீர்வு கண்டு கரீஷ்மா குடும்பத்தில் மீண்டும் சந்தோஷம் பரவ வழி வகுத்துள்ள கதை தற்போது வெளியாகியுள்ளது.
கரீஷ்மாவுக்கும், அவரது கணவர் சஞ்சய் கபூருக்கும் இடையே மனத்தாங்கல் இருந்து வந்தது. இதனால் கரீஷ்மா விரக்தியுடன் காணப்பட்டார். இன்று நேற்று இல்லை, கடந்த இரு வருடங்களாகவே பூசலில் இருந்து வந்தனர் கரீஷ்மா - சஞ்சய் தம்பதியினர்.
மகள் சமைரா பிறந்ததும், டெல்லியில் உள்ள கணவர் வீட்டிலிருந்து கிளம்பி மும்பைக்கு தாய் வீட்டுக்கு வந்து விட்டார் கரீஷ்மா. இருவரும் பிரியப் போகிறார்கள் என்று கூட பேசப்பட்டு வந்தது.
இந்தநிலையில்தான் கரீனாவும், சைப்அலி கானும் மேட்டரில் தலையிட்டனர். கரீஷ்மாவுக்கு கரீனாவும், சஞ்சய்க்கு, சைப் அலியும் பல்வேறு அட்வைஸ்களை எடுத்துச் சொல்லி இருவரது மனப் புழுக்கத்தையும் விலக்கி இருவரையும் சந்திக்க வைத்து மனம் விட்டுப் பேச வழி செய்தனர்.
இதன் விளைவு கணவருடன் சமரசமாகி விட்டார் கரீஷ்மா. மனக் குழப்பங்கள், பிரச்சினைகள் விலகி கணவருடன் மீண்டும் இணைந்துள்ளாராம் கரீனா.
கரீனா, சைப் அலிக்காக இல்லாவிட்டாலும், தனது மகளுக்காக கணவருடன் இணைய அவர் முடிவெடுத்தாராம்.
பேஷ், பேஷ்.