twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மகிழ்ச்சிக்குத் திரும்பிய கரீஷ்மா

    By Staff
    |

    Karishma Kapoor, Kareena Kapoor and Saif Ali Khan
    ஒரு காலத்தில் பாலிவுட்டின் பிசி நடிகைகளில் ஒருவராக இருந்த கரீஷ்மா கபூர், கணவருடன் ஏற்பட்டிருந்த பிணக்கு நீங்கி மீண்டும் சந்தோஷ சம்சார சாகரத்தில் திளைக்கத் தொடங்கியுள்ளாரம். எல்லாம் தங்கை கரீனா கபூரும், அவரது காதலர் சைப் அலிகானும் மேற்கொண்ட சமரச முயற்சிகளின் பலனாம்.

    கரீனா கபூரும், சைப் அலிகானும் கொஞ்ச காலமாக தீவிரமாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் நலனை மட்டும் பார்க்காமல் கரீஷ்மாவின் இல்லற சிக்கலுக்கும் தற்போது தீர்வு கண்டு கரீஷ்மா குடும்பத்தில் மீண்டும் சந்தோஷம் பரவ வழி வகுத்துள்ள கதை தற்போது வெளியாகியுள்ளது.

    கரீஷ்மாவுக்கும், அவரது கணவர் சஞ்சய் கபூருக்கும் இடையே மனத்தாங்கல் இருந்து வந்தது. இதனால் கரீஷ்மா விரக்தியுடன் காணப்பட்டார். இன்று நேற்று இல்லை, கடந்த இரு வருடங்களாகவே பூசலில் இருந்து வந்தனர் கரீஷ்மா - சஞ்சய் தம்பதியினர்.

    மகள் சமைரா பிறந்ததும், டெல்லியில் உள்ள கணவர் வீட்டிலிருந்து கிளம்பி மும்பைக்கு தாய் வீட்டுக்கு வந்து விட்டார் கரீஷ்மா. இருவரும் பிரியப் போகிறார்கள் என்று கூட பேசப்பட்டு வந்தது.

    இந்தநிலையில்தான் கரீனாவும், சைப்அலி கானும் மேட்டரில் தலையிட்டனர். கரீஷ்மாவுக்கு கரீனாவும், சஞ்சய்க்கு, சைப் அலியும் பல்வேறு அட்வைஸ்களை எடுத்துச் சொல்லி இருவரது மனப் புழுக்கத்தையும் விலக்கி இருவரையும் சந்திக்க வைத்து மனம் விட்டுப் பேச வழி செய்தனர்.

    இதன் விளைவு கணவருடன் சமரசமாகி விட்டார் கரீஷ்மா. மனக் குழப்பங்கள், பிரச்சினைகள் விலகி கணவருடன் மீண்டும் இணைந்துள்ளாராம் கரீனா.

    கரீனா, சைப் அலிக்காக இல்லாவிட்டாலும், தனது மகளுக்காக கணவருடன் இணைய அவர் முடிவெடுத்தாராம்.

    பேஷ், பேஷ்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X